நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாம் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது.
108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான நேரடி வேலை வாய்ப்பு முகாம் வருகிற 18ம் தேதி வியாழக்கிழமை, காலை 10 மணி முதல் 2 மணி வரை, நாமக்கல் திருச்சி ரோட்டில் பழைய கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
டிரைவருக்கான அடிப்படை தகுதிகள்:
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு குறைவாகவும் இருக்க வேண்டும். ஆண் பெண் இரு பாலரும் கலந்து கொள்ளலாம். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
லைட் வாகன லைசென்ஸ் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் பெற்று, குறைந்தபட்சம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 21,120 மொத்தமாக வழங்கப்படும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை, மருத்துவம் சம்பந்தப்பட்ட தேர்வு மற்றும் சாலை விதிகளுக்கான தேர்வுகள் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 10 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணி வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகள்:
பிஎஸ்சி நர்சிங். அல்லது ஜி என் எம்,, ஏ என் எம்,, டி எம் எல் டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு தேர்வு அன்று 19-க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ. 21,320 மொத்தமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வுக்கு வருபவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை நர்சிங் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மேலும் விவரங்கள் அறிய 8925940969 என்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




