Close
ஜூன் 19, 2026 12:50 காலை

சுகாதாரமான முறையில் கோழிப்பண்ணைகளை பராமரிக்க வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், சுகாதாரமாக கோழிப்பண்ணைகளை பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் இயங்கிவரும் கோழிப்பண்ணைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது;
கோழிப்பண்ணைகளில் ஈக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும், துற்நாற்றம் ஏற்படாமல் சுகாதாரமாக பராமரிக்கவும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் பண்ணைகளை பராமரிக்க வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செல்வகணபதி (குமாரபாளையம்), ரகுநாதன் (நாமக்கல்), கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் அருள்பிரகாஷ்ராஜ், கோழிநோய் ஆய்வுக்கூட உதவி இயக்குனர் மணிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top