Close
ஜூலை 17, 2026 4:16 காலை

ஊரக வளர்ச்சித் துறை திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின்கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், ஊரக வீடுகள் வழங்கும் திட்டம் , ஏரிகள் புனரமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II, வளர்ச்சியடைந்த ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (கிராமியம்). பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டடங்கள் கட்டுமானம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சாலைப்பணிகள் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்
பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் காஞ்சனா, செயற்பொறியாளர் இளங்கோ, உதவி இயக்குநர் நிலையிலான அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் (ஊ.வ), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top