மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு நாளை ஒட்டி மாணவிகளுக்கு அப்துல் கலாம் அறிவியல் மன்றம் சார்பாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு அப்துல்கலாம் அறிவியல் மன்ற முள்ளிப்பள்ளம், மன்னாடி மங்கலம் நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் மன்ற தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இரா. தீபா முன்னிலை வகித்தார். சோழவந்தான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் அறிவியல் மன்ற நிர்வாகிகள் ஆறுமுகம், சங்கையா என்ற தவம், வாலகுரு, ஆனந்த், கருப்பசாமி, சோலை ராம்குமார், ஹாட் புல்னெஸ் தாலுகா பொறுப்பாளர் சங்கர பாண்டி மற்றும் அப்துல் கலாம் அறிவியல் மன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்




