நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்மதுபாலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி மொத்தம் 743 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 27,339 மதிப்பில் ஸ்டிக், கண்ணாடி, சக்கர நாற்காலி மற்றும் பார்வையற்றோருக்கான டெய்சி பிளேயர் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், டிஆர்ஓ சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்




