Close
ஜூலை 30, 2026 8:37 மணி

நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் தேசிய தபால் எழுதும் போட்டியில் சாதனை

தேசிய தபால் எழுதும் போட்டியில் விருதுபெற்ற, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களை பள்ளி தலைவர் சரவணன் பாராட்டினார்.

தபால்துறை சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று விருது பெற்றனர்.

இந்திய தபால்துறை சார்பில் தாய் அகர் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது. எனது முன்மாதிரிக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

5ம் வகுப்பு மாணவன் நித்திஷ் ரோஷன் மற்றும் 8ம் வகுப்பு மாணவி அனன்யா சரவணன் ஆகியோர் போட்டியில் வெற்றிபெற்று, மாவட்ட அளவிலான சிறப்பு திறன் விருதை (அவார்ட் ஃபர் எக்சலன்ஸ்) பெற்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்களிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தலைவர் சரவணன், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top