Close
ஆகஸ்ட் 7, 2026 10:19 மணி

தென்காசி தெற்கு மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கருணாநிதி நினைவேந்தல்:

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தென்காசி தெற்கு மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கருணாநிதி திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் அவர்கள் சுரண்டை நகர பேருந்து நிலையம், பாவூர்சத்திரம், திப்பணம்பட்டி மைதானம், தென்காசி காந்தி சிலை,தென்காசி தெற்கு மாவட்டக் கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம், குத்துக்கல்வலசை மற்றும் பிரானூர் பார்டர் ஆகிய 7 இடங்களில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, கருணாநிதி திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கருணாநிதி அவர்களின் சாதனைகள் மற்றும் மக்கள் பணிகளை நினைவுகூர்ந்து கழகத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிகழ்வுகளில் ஒன்றியச் செயலாளர்கள் சீனித்துரை, ரமேஷ், அழகுசுந்தரம், திவான் ஒலி, ஷேக் முகமது, நகரச் செயலாளர்கள் சாதிக், கணேசன், வெங்கடேசன், பேரூர் செயலாளர் முத்தையா, மாவட்டத் துணைச் செயலாளர் கென்னடி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள், ரஹீம், தட்சிண மாற நாடார் சங்கத் தலைவர் காளிதாஸ், கழக கல்வியாளர் அணி இணைச் செயலாளர் ஆலடி எழில்வாணன், மாவட்டக் கவுன்சிலர் சாக்ரடீஸ், கீழப்பாவூர் ஒன்றியக் குழுத் தலைவர் காவேரி சீனித்துரை, மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top