Close
ஆகஸ்ட் 30, 2026 11:54 காலை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நிறைவு: விடுபட்டவர்கள் தொடர்புகொள்ள கலெக்டர் அழைப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை நிறைவு பெறுகிறது. இதுவரை தங்கள் வீடுகளில் கணக்கெடுப்பு நடைபெறாதவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியமான மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரகத்தால் அறிவிக்கபட்டு உள்ளவாறு, தமிழகத்தில் 30ம் தேதி வரை, வீடுகள்தோறும் சென்று, வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமானதாகும். நாமக்கல் மாவட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ள தங்கள் பகுதிக்கு கணக்கெடுப்பு அலுவலர் இன்னும் வராமல் இருந்தால் பொதுமக்கள் 1800-599-4286 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

தாலுகா அலுவலகங்களை பொறுத்தவரை, வட்டாட்சியர் செல்போன் எண்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம். குமாரபாளையம் பகுதியில் வசிப்பவர்கள் வட்டாட்சியர் எண் 9445461801, திருச்செங்கோடு 9445000545, ராசிபுரம் 9445000544, கொல்லிமலை 9944696644, சேந்தமங்கலம் 9445461913, மோகனூர் 9384094473, நாமக்கல் 9445000543, பரமத்தி வேலூர் வட்டாட்சியர் எண். 9445000546 ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம்.

இதுவரை தங்கள் வீடுகளில் கணக்கெடுப்பு நடைபெறாவிட்டால், சம்மந்தப்பட்டவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் உடனடியாக கணக்கெடுப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top