Close
மே 2, 2024 4:07 காலை

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூர்

விவசாயிகள் கோரிக்கை

சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கடுவை நீட்டித்து தர வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர். இராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர் ஆகியோர் சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை நீட்டித்து தர வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மின்னஞ்சல் மூலம்  அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட குருவைப் பயிர் போதிய தண்ணீர் வரத்தின்றி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடனாளியாகி உள்ளனர்.

இந்நிலையில் சம்பா பருவத்திற்காக போதிய தண்ணீர் கிடைக்காததால், சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற் கான பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 வரை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா அடங்கல் பெறுவதற்கு பண்டிகை விடுமுறை மற்றும் நிர்வாக காரணங்களினால் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். தற்போது மழை பெய்து வருவதாலும், காவேரி தண்ணீர் ஓரளவு வருவதை நம்பியும் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை மேற் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள  பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி  நவம்பர் 15  என்கிற காலக் கெடுவை மேலும் ஒரு மாத காலத்திற்கு (டிச.15)  நீட்டித்து  அறிவிக்க  வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசையும், மாவட்ட நிர்வாகத் தையும்  கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top