Close
மே 20, 2024 5:49 மணி

ஈ டிவி பாரத் ஊடக மூத்த செய்தியாளர் ஆர்.லெனின் மறைவு : சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்

சென்னை

சென்னையில் மரணமடைந்த செய்தியாளர் லெனின்

ஈ டிவி பாரத் ஊடக மூத்த செய்தியாளர் ஆர்.லெனின் மறைவுக்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்  தெரிவித்துள்ளது.

சென்னையில் ஈ டிவி ஊடக நிறுவனத்தில் மூத்த செய்தியா ளராக பணியாற்றி வந்த ஆர்.லெனின் (38)  07-08-2023 திங்கட்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது.

அவர் இன்று மாலை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் ஆர்.லெனின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

38 வயதான ஆர்.லெனின் , இந்தியன் எக்ஸ்பிரஸ், டிடி நெக்ஸ்ட்,டெக்கான் கிரானிக்கல் ஆகிய நாளிதழ்களில் சிறப்பாக பணியாற்றிய செய்தியாளர். சுற்றுச்சூழல் குறித்த செய்திகளை மிகுந்த சமூக அக்கறையுடன் பதிவு செய்துக் கொண்டிருந்த நல்ல ஊடகவியலாளர் இன்று நம்மிடையே இல்லை.அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், ஊடக உறவுகள் என அனைவருடனும் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

சமீப காலமாக இளம் வயது ஊடகவியலாளர்கள் மறைவு செய்திகள் பேரதிர்ச்சியைத் தருகிறது. இந்த சூழலில்பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலன் குறித்து அக்கறைக் கொண்டு உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதும் மன அழுத்தமின்றி வாழும் பயிற்சிகளை மேற்கொள்வதும் அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறோம் என சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச்செயலர் பாரதிதமிழன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top