Close
ஏப்ரல் 29, 2024 8:59 காலை

பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

ஈரோடு

பெருந்துறையில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் பயனாளிகளுக்கு ஆட்டோ வழங்கிய நிர்வாகிகள் கே.சி. கருப்பணன், ஜெயகுமார் எம்எல்ஏ.

பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு  மானிய விலையில் 69 ஆட்டோக்களை முன்னாள் அமைச்சர் கே சி கருப்பணன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர ஜெயக்குமார் ஆகியோர் வழங்கினர்

பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுய வேலை வாய்ப்பை தேடும் இளைஞர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கப்படும் என, பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான ஜெயக்குமார்  அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து சுமார் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்களும், சுயதொழில் முனைவோர்களும் ஆட்டோ வழங்க வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.  தகுதியுள்ள பெரும்பாலான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது.

இந்நிலையில் முதல் கட்டமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 12 -ஆம் தேதி 69 ஆட்டோக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆட்டோக்கள் வழங்கும் திட்டத்தை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பயனாளிகளுக்கு சாவியை வழங்கி தொடங்கி வைத்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று பெருந்துறை பழைய பஸ் நிலையம் அருகே 69  இளைஞர்களுக்கு ஆட்டோக்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில்,  அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமான கே சி கருப்பணன் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான ஜெயக்குமார் 69 பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்கினர் .

நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ்,  அதிமுக நிர்வாகிஅருள்ஜோதி நவீன் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top