Close
ஏப்ரல் 23, 2026 11:30 மணி

குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார்: டிடிவி தினகரன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் அமமுக உசிலம்பட்டி தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது: குடியரசு துணைத் தலைவராக என்.டி.ஏ. கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உறுதியாக வெற்றி பெறுவார், எங்களுக்கு 1999 நாடாளுமன்றத்தில் இருந்து நல்ல நண்பர், இனிமையானவர், எல்லாரிடமும் எளிமையாக பழக கூடியவர்.

இப்போது, ஆளுநராக பொறுப்பேற்ற பின்னும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது எப்படி பழகினாரோ அதே போன்று பழக கூடியவர், அவர் இந்தியாவின் குடியரசு துணை தலைவராவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெருமை சேர்க்க கூடிய விஷயம் தான் என்று கூறினார்.

தவெக மாநாட்டில் அண்ணா, எம்.ஜி.ஆர்., படங்களை பயன்படுத்தியது குறித்து அவர் கூறுகையில், அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா, காமராஜர் போன்ற தலைவர்களை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டில் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அரசியல் செய்ய முடியாது. விஜய் எந்த எந்த கட்சியை பற்றி பேசினாரோ, அந்த அந்த கட்சியினர் பதில் அளிப்பார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் 108 வாகனம் தாக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் பாத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக பதில் அளிப்பார்கள்.

வரும் டிசம்பருக்குள் தமிழகத்தில் எத்தனை அணிகள் ஒன்று சேர போகிறது, என்ன என்ன கூட்டணி அமைய போகிறது என, அனைவருக்கும் தெரிய வரும்.

அமமுகவின் கீழ் அம்மாவின் தொண்டர்கள் பல்வேறு சோதனைகளையும், பிரச்சனைகளையும் தாண்டி அமமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது., 2026 தேர்தலில் அமமுக சரியான முத்திரை பெறும். அடுத்தடுத்து, தேர்தலுக்கான சுற்றுப் பயணங்கள் விரைவில் நடைபெறும் என கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top