முன்னாள் கபிலர்மலைத் தொகுதி எம்எல்ஏ சரஸ்வரதி, திமுகவில் இருந்து விலகி இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமானார்.
நாமக்கல் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கபிலர்மலை தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு திமுகவில் சேர்ந்தார்.
தற்போது திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து, பூங்கொத்து வழங்கி, தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் நாமக்கல் நகர செயலாளர் ஆட்டோ ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.




