Close
ஆகஸ்ட் 23, 2026 10:15 மணி

காங் தலைமை அலுவலகம் வெளியே ராகுல் காந்தியை “பேட்மேன்” ஆகச் சித்தரித்து போஸ்டர்கள்!

டில்லியில் உள்ள அகில இந்திய காங். கமிட்டி தலைமை அலுவலகத்திற்கு வெளியே, ராகுல் காந்தியை “நிஜ வாழ்க்கை பேட்மேன்” எனச் சித்தரிக்கும் போஸ்டர் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

அந்தப் போஸ்டர்களில், ராகுல் காந்தியின் உருவப் படத்துடன் “அமைதியான பாதுகாவலன், விழிப்புடன் காக்கும் ரட்சகன். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நிஜ வாழ்க்கை பேட்மேன்” என்ற வரிகள் அச்சிடப்பட்டுள்ளன.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் தளத்தில் மாணவர்களுடனும் இளைஞர்களுடனும் ராகுல் காந்தி நடத்திய நேரலை உரையாடலின் போது, ஒரு மாணவர் ஜாலியாக “நீங்கள் பேட்மேனா?” என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு ராகுல் காந்தி நகைச்சுவையாக, “என்னையும் பேட்மேனையும் இதுவரை ஒரே அறையில் யாரும் ஒன்றாகப் பார்த்ததில்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்!” என்று பதிலளித்திருந்தார். இவரது இந்த நையாண்டியான பதில் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகவும், ட்ரெண்டிங்காகவும் வைரலானது. அதைத் தொடர்ந்தே தற்பொழுது கட்சி அலுவலகத்திற்கு வெளியே இந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜந்தர் மந்தரில் ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக பார்லி. போலீஸ் ஸ்டேஷன் முன்பு ராகுல் காந்தி மற்றும் காங். தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். “எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல், நீதி கிடைக்காமல் நாங்கள் நகர மாட்டோம்” என உறுதியாக இருந்த ராகுல் காந்தியின் தலையீட்டைத் தொடர்ந்து, டில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top