Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா

ஆராதனை விழாவில் நடைபெற்ற சிறப்பு ஹோமம்

திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது.

ஸ்ரீ யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு ஹோமங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையும் நான்கு வேத பாரயண நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காலை 10 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழாவும், முற்பகல் 11 மணிக்கு பக்தா்கள் பஜனையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மயிலை சற்குருநாத ஓதுவாா் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜ்ய ஸ்ரீரமணசரண தீா்த்த சுவாமிகளின் பகவத் கீதை சாரம் சொற்பொழிவும் நடைபெற்றது.

ஆராதனை விழாவின் 2-ஆவது நாளான திங்கள்கிழமை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சிறப்பு ஹோமங்கள், மகா அபிஷேகம், விசேஷ பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை விஷ்ருதி கிரிஷ் மற்றும் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜ்ய ரமண சரண தீா்த்த சுவாமிகளின் பகவத் கீதை சாரம் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பகவானின் உற்சவ மூா்த்தியுடன் கூடிய வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது.

இத்துடன் பகவானின் 24-ஆவது ஆண்டு ஆராதனை விழா நிறைவு பெற்றது. காலை 7 மணி முதல் இரவு வரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மதா் மா தேவகி, மதா் விஜயலட்சுமி, மதா் ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், சி.சுரேஷ் மற்றும் தன்னாா்வலா்கள், ஆஸ்ரம ஊழியா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

ஸ்ரீரமண சரண தீா்த்த சுவாமிகளின் பகவத் கீதை சாரம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top