Close
ஏப்ரல் 23, 2026 10:01 மணி

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாற்றுதிறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாமை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வரின் ஆணைப்படி மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு பல சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு கல்வி உதவி, நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள் என பல்வேறு உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

மேலும், டிசம்பர் 10 தொடங்கி டிசம்பர் 28 வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுகிறது.

இதில் முதல் நாளான புதன்கிழமை திருவண்ணாமலையில் உள்ள நகராட்சி டவுன் ஹால் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாமை ஆட்சியா் தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், டிசம்பர் 12-ஆம் தேதி வெம்பாக்கம், டிசம்பர் 16-இல் தண்டராம்பட்டு, டிசம்பர் 17 அனக்காவூா், டிசம்பர் 19 புதுப்பாளையம், டிசம்பர் செய்யாறு, டிசம்பர் 24 செங்கம், டிசம்பர் 26 தெள்ளாா், டிசம்பர் 30 கலசப்பாக்கம், டிசம்பர் 31பெரணமல்லூா்,

ஜனவரி 2 வந்தவாசி, ஜனவரி 6 துரிஞ்சாபுரம், ஜனவரி 7 மேற்கு ஆரணி, ஜனவரி 9 ஆரணி, ஜனவரி 21 ஜவ்வாதுமலை, ஜனவரி 23 கீழ்பென்னாத்தூா், ஜனவரி 27 சேத்துப்பட்டு, ஜனவரி 28-இல் போளூா் ஆகிய இடங்களில் இந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் நடைபெறவுள்ளன.

18 வயதிற்குள்பட்ட மாற்றுத்திறன் பள்ளி மாணவா்களும், 18 வயதிற்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகளும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top