Close
ஏப்ரல் 23, 2026 11:32 மணி

அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்: எம்.பி. வழங்கினார்

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாதேஸ்வரன், எம்.பி., வழங்கினார்.

நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாதேஸ்வரன், எம்.பி., வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து, பள்ளிகளில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் மக்களவை தொகுதி எம்.பி. மாதேஸ்வரன் விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாச ராகவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகரத்தினம், பிடிஏ உறுப்பினர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவர்கள், திசா கமிட்டி உறுப்பினர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட கொமதேக வர்த்தக அணி செயலாளர் இளங்கோ, தெற்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top