Close
ஏப்ரல் 23, 2026 11:15 மணி

நாமக்கல்லில் 25 நாட்கள் கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி

நாமக்கல்லில் கறவை மாட்டுப்பண்ணை உதவியாளர் பயிற்சி 25 நாட்கள் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தல் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே), இம்மாதம் 3ஆவது வாரத்திலிருந்து, 25 நாட்கள், சிறப்பு பயிற்சியாக, கறவை மாட்டுப் பண்ணை உதவியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஒரு மாதத்திற்கு, 25 பேர் வீதம், சென்னையிலுள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன், வெற்றி நிச்சயம் என்ற திட்டத்தில், வேலையில்லாத இளைஞர்களுக்கு, கால்நடை வளர்ப்பில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில், 18 முதல் 50 வயதுடையவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பண்ணை மகளிர், விவசாய ஊரக இளைஞர்கள், படிப்பு முடித்து வேலையில்லாத மாணவ, மாணவியர், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

இப்பயிற்சியில் சேர கல்வித் தகுதியான பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தினமும் பயோமெட்ரிக் மூலம் வருகைப்பதிவு எடுக்கப்படும். வருகைப்பதிவு எடுக்கப்பட்டு, 25 நாட்கள் முடிந்தவுடன் பயணப்படியாக ரூ. 6,000 வீதம் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

80 கி.மீ.,க்கு மேல் இருந்து வரும் பயனாளிகளுக்கு, விடுதியில் தங்கி பயிற்சி பெற அனுமதிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் பெயர், முழுவிலாசம், ஆதார் எண், மொபைல் எண், இ மெயில் முகவரி இணைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 04286 -266345 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top