Close
ஏப்ரல் 24, 2026 12:56 காலை

மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரை நடைதிறப்பில் மாற்றம்

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருகின்ற டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 15- 2026 வரை நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

மார்கழி திருப்பள்ளியெழுச்சியை முன்னிட்டு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, திருப்பள்ளியெழுச்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படும்

பிறகு 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு நடை சாத்தப்படும். இந்த நடைமுறையானது குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சபரிமலை யாத்திரிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மீனாட்சியம்மனை தரிசிக்க செல்கின்றனர்.

எனவே, நம்ம ஊர் மக்கள் இதற்கு ஏற்றார் போல உங்கள் பயணத் திட்டத்தை வைத்துக் கொள்ளவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top