Close
ஏப்ரல் 24, 2026 12:56 காலை

அலங்காநல்லூர் அருகே புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.ஒரு கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் அச்சம்பட்டி கால்வாய் முதல் வலசை கிராம ஊரணி கால்வாய் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வள்ளி, கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், அருண் விஜயன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலர் முருகேஸ்வரி வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தனுஷ்கோடி, சேது சீனிவாசன், பேரூராட்சி கவுன்சிலர் அம்சவல்லி கண்ணன் மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒப்பந்ததாரர் குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top