நாமக்கல்லில் வருகிற 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஜூலை மாதத்திற்கான, நாமக்கல் மாவட்டவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருகிற 30ம் தேதி வியாழக்கிழமை, காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார். விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு, வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




