காஞ்சிபுரம் மாமன்றத்தில் மாதாந்திர கூட்டம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் அறிஞர் அண்ணா அரங்கில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி ஆணையர் வினோத், மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டு 112 தீர்மாணங்கள் முன் வைக்கப்பட்டதில் 111 தீர்மானங்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்த நிலையில் 48வது மாமன்ற உறுப்பினர் கார்த்திக், காஞ்சிபுரம் மாநகராட்சியில் நோய் தடுப்பு பிரிவின் கீழ் பொதுமக்களுக்கு டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு பயன்படுத்தப்படும் வாகனத்திற்கு தேவைப்படும் டீசல் கொள்முதல் அரசு கூட்டுறவு பெட்ரோல் நிலையங்களில் கொள்முதல் செய்யாமல் தனியார் நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதால் ஊழல் நடைபெறுவதாகவும், இதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுவதாகவும் ஆவணங்களுடன் தெரிவித்து அந்நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
குறைந்தளவு தேவைப்படும் எரிபொருளுக்கு பதிலாக இரு மடங்கு கணக்கு காட்டி மோசடியில் ஈடுபட்ட ஊழியரின் செயலை ஆதாரங்களுடன் காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.




