காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில், புதிய திருத்தேர் செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பணிகள் வெகுவிமர்சையாகத் தொடங்கப்படவுள்ளன.
சட்டப்பேரவை அறிவிப்பு 2025-26-ன் படி, காஞ்சிபுரம் தேவராஜசுவாமி திருக்கோயிலுக்குப் புதிய திருத்தேர் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக உபயதாரர் நிதி மூலம் ரூபாய் 4.25 கோடி மதிப்பீட்டில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய திருத்தேர் செய்வதற்கான தொடக்கப் விழா, வரும் புதன்கிழமை (26.08.2026) காலை 9.30 மணி அளவில் திருக்கோயில் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய திருத்தேர் செய்யும் மரப்பணிகளைத் தலைமைதாங்கித் தொடங்கி வைக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆன்மீகச் சான்றோர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி எம்பெருமானின் அருள் பெறவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தேர் திருப்பணி தொடக்க விழாவில் பங்கேற்று சிறப்பிக்கவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்போடு அழைப்பு விடுக்கப்படுகிறது.




