Close
ஆகஸ்ட் 30, 2026 7:25 மணி

நாமக்கல் மாகநராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல்

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், மாநகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி உத்தரவின் பேரில், நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில், மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களின் தலைமையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 52 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் பழைய பேருந்து நிலையம் அருகில் விஜயகுமார் என்பவரது பீடா ஸ்டாலில் இருந்து 280 கிராம் ஹான்ஸ், பட்டறைமேடு பகுதியில் ஜெய்பூர் லக்கி டீ கடையில் இருந்து 40 கிராம் ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கந்து முத்துசாமி தெருவில் ஒரு கடையில் சந்தேகத்திற்கு இடமான கூல் வைப் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்ட 1.6 கிலோ எடையுள்ள பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் மாநகர நல அலுவலர் கஸ்தூரி பாய், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் சுப்பிரமணி, செல்வகுமார், பாஸ்கர், ஜான் ராஜா, நந்தினி, களப்பணி உதவியாளர் சபரிநாதன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா அலுவலர்கள் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேல் நடவடிக்கைக்காக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top