Close
ஆகஸ்ட் 30, 2026 7:26 மணி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சிறுதானிய சாகுபடி, மதிப்பு கூட்டல் பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில், அறிவியல் ரீதியான சிறுதானிய சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜூ தலைமை வகித்தார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுபாஷ் பயிற்சியை தொடங்கி வைத்தார். வேளாண் அறிவியல் நிலைய தலைவர் சசிகலா பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.

பயிற்சியில் மண் அறிவியல் துறை நிபுணர் சிவரஞ்சனி, சிறுதானிய உற்பத்திக்கான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்தும், கால்நடை அறிவியல் துறை நிபுணர் கதிரவன் சிறுதானிய பயிர் கழிவுகளை கால்நடை தீவனமாக பயன்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினர்.

மனையியல் துறை நிபுணர் செந்தாமரை செல்வி, சிறுதானியங்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் குறித்து செயல்விளக்கம் அளித்தார். இதில் சிறுதானிய லட்டு, சத்து மாவு மற்றும் உடனடி உணவு கலவைகள் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னதாக பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 கிலோ சோள விதைகள், காய்கறி விதைகள், செறிவூட்டப்பட்ட மட்கிய உரம், எலுமிச்சை மற்றும் முருங்கை கன்றுகள் அடங்கிய ஊட்டச்சத்து தோட்டத் தொகுப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப வல்லுநர் இளவரசன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top