Close
செப்டம்பர் 7, 2026 4:51 மணி

தெத்துக்காடு கிராமத்தில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திருமலைப்பட்டி ஊராட்சி, தெத்துக்காடு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மதுபாலன் முகாமை துவக்கி வைத்து, சிறந்த கால்நடை வளர்போருக்கு பரிசுகளை வழங்கி பேசியதாவது:

கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப்பெறாத கிராமங்களில், கால்நடைகளின் நலம் பாதுகாக்கும் வகையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் தலா 18 முகாம்கள் வீதம் 270 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், சுண்டுவாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.

முகாம்கள் நடத்தப்படும் நாள் மற்றும் இடம் அந்தந்த கால்நடை உதவி மருத்துவர்களால் அறிவிக்கப்படும். முகாமிற்கு கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை அழைத்து சென்று பயனடைய வேண்டும் என அவர் கூறினார்.

முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பழனிவேல், ஊராட்சி உதவி இயக்குநர் பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top