Close
மார்ச் 7, 2026 8:01 மணி

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் பெண்களுக்கு இலவச தொழில் முனைவோர் பயிற்சி: 10ம் தேதி நேர்முகத் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில், பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சேர்க்கை பெற வருகிற 10ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

மத்திய அரசின் சார்பில், அகமதாபாத்தில் இயங்கி வரும் தேசிய வள அமைப்பான இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (இடிஐஐ) சார்பில், நாமக்கல் மாவட்டத்தில், தொழில்முனைவோராக விருப்பமுள்ள 18 வயதிற்கு மேற்பட்ட, 45 வயதுக்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தொழில் முனைவோர் பயிற்சியுடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

துணி மற்றும் சணல் பொருட்களில் இருந்து தையல் மூலம் லேப்டாப் பேக், ஷாப்பிங் பேக், பர்ஸ், ஃபைல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிப்பதற்கான ஒரு மாத கால இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, ரெட்டிபட்டி அருகில் இந்த பயிற்சி மையம் அமைந்துள்ளது.

இந்தப் பயிற்சியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானிய திட்டங்கள் போன்றவைகள் குறித்து விளக்கமாக பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். பயனாளிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 11ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 88258 12528 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பி தங்கள் பெயரினை முன்பதிவு செய்து, தேவையான விவரங்களை பெற்று, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என, இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய திட்ட அலுவலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top