Close
மார்ச் 7, 2026 6:03 மணி

போதைப்பொருள் தடுப்பு பிரச்சாரத்தில் முதலிடம்: நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு கலெக்டர் பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் முதலிடம் பெற்ற, நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு, கலெக்டர் துர்காமூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற நேஷனல் பப்ளிக் பள்ளிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி 2024-2025 ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் போதைப் பொருள் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் மாணவர்களிøடையே பல்வேறு போட்டிகள், கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மேலும் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு குழு வழியாக அதிகப்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்திய சிறந்த 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.

அதில் நாமக்கல் வசந்தபுரத்தில் அமைந்துள்ள நேஷனல் பப்ளிக் பள்ளி முதலிடம் பெற்றது. போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில், நன்முறையில் செயல்பட்ட இப்பள்ளிக்கு, மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பாராட்டு சான்றிதழ் மற்றும் தமிழக அரசு சார்பில் ரூ. 15,000 ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.

பள்ளியின் முதல்வர் ராஜசுந்தரவேல், பள்ளியின் போதைப் பொருள் எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி ஆகியோர் பரிசினை பெற்றுக்கொண்டனர்.

எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் விமலா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சிறந்த முறையில் போதைப்பொருள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய பள்ளி மாணவர்களை பள்ளி சேர்மன் சரவணன் பாராட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top