Close
மார்ச் 7, 2026 2:52 மணி

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் பவித்ரோத்சவ விழா கோலாகலம்

பவித்ரோத்சவத்தை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில், யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்ர மாலைகள் மற்றும் பூனூல்களை சுவாமிக்கு அணிவிப்பதற்காக பட்டாச்சாரியார்கள் எடுத்துச்சென்றனர்.

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயிலில் பவித்ரோத்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. பவித்ரோத்சவம் என்பது புனித விழா அல்லது தூய்மைக்கான விழா என்று பொருள்படும். பெருமாள் கோயில்களில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும்.

இந்த உற்சவம், கோயிலில் ஒரு ஆண்டில் பூஜைகளில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது தூய்மையற்ற செயல்களால் உண்டாகும் தோஷங்களைப் போக்கி, பரிகாரமாக இது பெரும்பாலும் ஆவணி மாதத்தில் நடத்தப்படுகிறது. கோயிலுக்குப் பலதரப்பட்ட மக்களும் வருவார்கள். அனைவரையும் தடுக்க இயலாது. அதே போல் பூஜை செய்யும்போதும் சில சமயங்களில் தவறுகள் நடைபெறலாம், மந்திர உச்சரிப்புக்களிலும் தவறுகள் நேரிடலாம்.

இவைகளினால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வகையில் செய்யப்படும் பூஜையே பவித்ரோத்சவம் ஆகும். இந்த உற்சவத்தில் உற்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.

நாமக்கல் நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தில் பவித்ரோற்சவம் நடைபெறுவது வழக்கம். நரசிம்மர் சாமி கோயிலில் பௌர்ணமி நாளில் அதிகாலை துவங்கி சிறப்பு பவித்ரோத்சவ யாக பூஜைகள் நடைபெற்றன.

கோயில் பட்டாச்சாரியார்கள் ராஜாபட்டர், வெங்கடேசன் பட்டர் ஆகியோர் தலைமையில் சுவாமிக்கு அணிவிக்கும் பவித்ர மாலைகள் மற்றும் பூணூல்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

யாகசாலை பூஜை முடிந்தபின்னர் பட்டாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட பவித்ர மாலைகள் மற்றும் பூணூகளை எடுத்துச்சென்று, சுவாமிக்கு அணிவித்து சிறப்பு பூஜைகளை நடத்தினார்கள்.

பின்னர் மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top