நாமக்கல் ஐயப்பன் கோயில் 60ம் ஆண்டு மண்டல பூஜை விழாவையொட்டி நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகெண்டனர்.
நாமக்கல் – மோகனூர் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோயில் 60ம் ஆண்டு மண்டல பூஜை விழா நேற்று தொடங்கியது. விழாவில் முதல் நிகழ்வாக, ஐயப்பன் கோவில் வளாகத்தில் இருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.
அண்ணா சிலை, மணிக்கூண்டு, பேருந்து நிலையம், கடைவீதி வழியாக மெயின் ரோட்டில் சென்ற பால் குட ஊர்வலம், பலப்பட்டறை மாரியம்மன் கோயிலை அடைந்தது. அங்கு பால் குடம் சுமந்து வந்த பெண்கள் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஐயப்பன் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




