Close
ஜூன் 13, 2026 12:01 காலை

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழா : கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், நடைபெற்ற உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தார்.

குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கவும், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும், குழந்தைகளின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாக்கவும், குழந்தைகளின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளின் கைகளில் புத்தகம் இருக்க வேண்டும், வேலை கருவிகள் அல்ல என்பதே 2026 ஆம் ஆண்டிற்கான செய்தியாகும்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தலைமை வகித்து, விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டினார். டிஆர்ஓ சரவணன் தலைமையில் அனைத்து அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்றனர்.

நிகழ்ச்சியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ஆசியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்தியா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் இந்தியா, திருஞானசம்பந்தம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top