Close
மார்ச் 7, 2026 1:16 மணி

நாமக்கல்லில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

டிசம்பர் மாதத்திற்கான, மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 31ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.

இக்கூட்டத்தில் வேளாண் இடு பொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில், விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top