Close
மார்ச் 7, 2026 2:51 மணி

மத்திய அரசின் திட்டங்களை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும்: எம்.பி. வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் தலைவர் மாதேஸ்வரன் எம்.பி., பேசினார். அருகில் கலெக்டர் துர்கா மூர்த்தி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், ஈஸ்வரன் ஆகியோர்.

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசின் திட்டங்களை தரமாகவும், குறித்த நேரத்திற்குள்ளும் முடிக்க வேண்டும் என திசா கமிட்டி தலைவர் மாதேஸ்வரன், அதிகாரிகளை வலியுறுத்தினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக்குழு (திசா கமிட்டி) கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவர் மாதேஸ்வரன், எம்.பி., தலைமை வகித்தார். உறுப்பினர் செயலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம், திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், மத்திய அரசின் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட வேளாண் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பணிகள் அனைத்தும் திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி தரமாகவும், குறித்த நேரத்திலும் முடிக்கப்பட வேண்டும் என, குழுவின் தலைவர் மாதேஸ்வரன் எம்.பி., அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சரவணன், டிஆர்டிஏ திட்ட இயக்குனர் வடிவேல், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், ஆர்.டி.ஓ.,க்கள் சாந்தி, லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top