தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாமக்கல்லில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, வாக்காளர் தின உறுதிöமொழியை வாசித்தார்.
அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழியேற்றனர். தொடர்ந்து, விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்ச்யர் துவக்கி வைத்து, பொதுமக்களுடன் கலந்துகொண்டார்.
500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வாக்காளர் தின வாசகம் கொண்ட டி-ஷர்ட் அணிந்து கலந்துகொண்டனர். உழவர் சந்தை, ஆஞ்சநேயர் கோயில், மாரியம்மகோயில், மெயின் ரோடு, பழைய பேருந்து நிலையம் வழியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் பார்க் ரோட்டில் நிறைவு பெற்றது.
ஓட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, டிஆர்ஓ சரவணன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




