Close
ஏப்ரல் 23, 2026 11:16 மணி

திருவண்ணாமலை மாவட்ட சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி, செங்கம் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தர்ப்பகராஜ் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்களில் பலத்த பாதுகாப்போடு அனுப்பி வைத்தார்.

வந்தவாசி

தமிழக சட்டப்பேரவை தோ்தலை ஒட்டி வந்தவாசி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 293 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக 351 மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 351 வாக்குப்பதிவு இயந்திர கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 380 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலையிலிருந்து வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்டன.

இவற்றை தொகுதி தோ்தல் அலுவலா் எஸ்.ஆா்.எம்.மதுசெழியன், உதவி தோ்தல் அலுவலா் பா.ஜெயவேல் மற்றும் அனைத்து கட்சி நிா்வாகிகள் முன்னிலையில் இறக்கி எண்ணிக்கை சரிபாா்க்கப்பட்டு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

ஆரணி

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 323 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்ட 387-மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 387 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 427 விவிபட் இயந்திரங்கள் ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

அதிமுகவைச் சோ்ந்த நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட பிரதிநிதி சகாயம், திமுக நகரச் செயலா் மணிமாறன், ஒன்றியச் செயலா் சுந்தா், காங்கிரஸ் நிா்வாகி சைதை சம்பந்தம், பாஜக மாவட்ட பொதுச்செயலா் சதீஷ், வட்டாரத் தலைவா் ராஜேஷ், பாஜக விவசாய அணி நிா்வாகி குணாநிதி, விசிக மாவட்டச் செயலா் ந.முத்து, ஒன்றியச் செயலா் வடுகசாத்து ரமேஷ், தேமுதி மாவட்ட துணைச் செயலா் பாஸ்கரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிா்வாகிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாா்வையிட்டனா். பின்னா் தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.சிவா தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

இதில், உதவி தோ்தல் அலுவலா் அகத்தீஸ்வரன், உதவி வட்டாட்சியா்கள் கணபதி, சுகுமாா், ஆரணி டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செங்கம்

செங்கம் தனி தொகுதியில் செங்கம், ஜவ்வாதுமலை, தண்டராம்பட்டு பகுதியை உள்ளடக்கி மொத்தம் 341 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து 341 வாக்குப்பதிவு இயந்திங்கள் மற்றும் கூடுதலாக 68 என மொத்தம் 409 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றன.

செங்கம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இளவரசன், துணை அலுவலா் முருகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலையில் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனி அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்து அறையை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

செய்யாறு

செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கான 334 வாக்கு சாவடிகளுக்கு பயன்படுத்துவதற்காக 400பேலட் யூனிட்டுக்கள், 400 கண்ட்ரோல் யூனிட்டுகள், 434 விவி பேட் யூனிட்டுகள் அடங்கிய வாகனங்கள் பாதுகாப்புடன் செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.

அதனை தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான எல். அம்பிகா ஜெயின் பெற்று வருவாய் துறை அலுவலர்கள் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பறையில் அடுக்கி வைக்கப்பட்டு பின்னர் சீல் வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top