வருகிற மார்ச் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகிற மார்ச் 31ம் தேதி செவ்வாய்க்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளை மூடிவைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக்க மதுபான கடைகள், பார்கள் மற்றும் அனைத்து விதமான லைசென்ஸ் பெற்றுள்ள மதுக்கடைகளையும் 31ம் தேதி மூடி வைக்க வேண்டும். உத்தரவை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




