நாமக்கல் அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனையில், டூ வீலரில் ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ. 2.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில், வரும் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என 6 தொகுதிகள் உள்ளன. இங்கு, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று காலை 9:30 மணிக்கு, நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, புதுச்சத்திரம் அடுத்த கோவிந்தம்பாளையத்தில், கலைச்செல்வன் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கண்லூர்பட்டியை சேர்ந்த நடராஜன் என்பவர் வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ. 2 லட்சத்து, 52 ஆயிரத்து 900 இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பைனான்ஸ் நிறுவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அவர் கூறினார்.
அதற்கு எவ்வித ஆவணமும் அவரிடம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள், நாமக்கல் ஆர்டிஓ சாந்தியிடம் சாந்தியிடம் ஒப்படைத்தனர்.




