Close
ஏப்ரல் 23, 2026 8:15 மணி

வாடிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை: ரூ.1.27 லட்சம் பறிமுதல்

கோப்புப்படம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்

இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு நிலை கண்காணிப்பு குழு அதிகாரி முத்துராமன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் சிவகுமார், தலைமை காவலர் மகாலட்சுமி, மற்றும் போலீசார் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலம் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்த போது நந்தினி என்பவர் எந்தவித ஆவணமும் இல்லாமல் வைத்திருந்த ரூ.85,700 பறிமுதல் செய்தனர்.

அதேபோல் இரவு 1 மணிக்கு தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வாடிப்பட்டி மெயின் ரோட்டில் வாகன சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மலைச்சாமி என்பவரை பிடித்து விசாரித்த போது தேர்தலுக்கு வாக்காளருக்கு பணம் கொடுப்பதற்காக வந்ததாக ஒப்புக் கொண்டார். அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் ரூ. 41, 450 இருந்தது தெரிய வந்தது.

இதில் பறிமுதல் செய்த ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 120 வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முகவடிவேலிடம் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top