Close
ஏப்ரல் 23, 2026 6:32 மணி

சட்டசபை தேர்தல்: வாக்குச்சாவடிகளுக்கு இவிஎம் இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள், வாகனங்களில் அனுப்பி வைக்கும் பணியை கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு, தேவையான இவிஎம் மெசின்கள் மற்றும் பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏப்., 23, சட்டசபை தேர்தல் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, 6 தொகுதிகள் உள்ளன.

இந்த 6 தொகுதிகளில், 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வாக்குப்பதிவில் பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், தலா ஒரு முதன்மை அலுவலர், 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம், 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராசிபுரம் தொகுதியில், 1,368 அலுவலர்கள், சேந்தமங்கலத்தில் 1,460, நாமக்கல்லில் 1,488, ப.வேலூரில் 1,288, திருச்செங்கோட்டில் 1,392, குமாரபாளையத்தில் 1,548 என, மொத்தம் 8,544 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை காலை, 7:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்கும் வாக்குப்பதிவுக்காக, வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டுக்கருவி, விவிபேட் கருவி மற்றும் பொருட்கள் ஆகியவை, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி கலெக்டர் துர்கா மூர்த்தி மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் சட்டசபை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவிகள், பி.டி.ஓ., அலுவலகத்தில், பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி முன்னிலையில், அந்தந்த மையங்களுக்கான தேவையான கருவிகள் ஏற்றப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

அதேபோல், மாவட்டம் முழுவதும், அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு உள்பட்ட மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் கருவி அனுப்பப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top