Close
ஜூலை 24, 2026 6:56 மணி

மக்கள் ஆன்லைன் மூலம் குறைகளை தெரிவிக்க தீர்வு டிஜிட்டல் சேவை: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுபாலன் வழங்கினார். அருகில் எம்எல்ஏக்கள் திலீப், சந்திரசேகர்

பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, தங்களின் குறைகளை ஆன்லைன் மூலம் அனுப்பும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் தீர்வு டிஜிட்டல் சேவை தளம் துவக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

நாமக்கல் நகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. எம்எல்ஏக்கள் நாமக்கல் திலீப், சேந்தமங்கலம் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கலந்துகொண்டு, 1,236 பயனாளிகளுக்கு ரூ. 4.63 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தகுதியான மக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் சார்பில் 1,236 பயனாளிகளுக்கு ரூ. 4.63 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் வகையில் ”தீர்வு எனும் மக்களுக்கான டிஜிட்டல் சேவை தளம்” செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை இருந்த இடத்திலிருந்து பதிவிடும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்களது கோரிக்கைகள் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்ட மக்கள் அனைவரும் “தீர்வு – மக்களுக்கான டிஜிட்டல் சேவை” மூலம் தங்களது கோரிக்கைகளை சமர்ப்பித்து தீர்வு காணலாம் என கூறினார்.

டிஆர்ஓ சரவணன், சிப்காட் டிஆர்ஓ கண்ணன், ஆர்டிஓ சாந்தி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top