Close
ஜூலை 31, 2026 10:10 மணி

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், நாளை 1ம் தேதி முதல் 5 நாட்கள் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள, வானிலை முன் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த வாரம் மழை எதுவும் பதிவாகவில்லை. பகல் நேர வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் இரவு நேர வெப்பம் 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் நிலவியது.

நாளை ஆக 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை 95 டிகிரி முதல் 96.8 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை 75.2 முதல் 77 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.

5 நாட்கள் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம் 45 முதல் 80 சதவீதம் வரை இருக்கும். காற்று மேற்கு திசையில் இருந்து, மணிக்கு 4 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மாவட்டத்தில் நாளை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 மி.மீ, வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top