நாமக்கல் மாவட்டத்தில், பள்ளி இடைநின்ற மாணவ, மாணவியரை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், எருமப்பட்டி ஒன்றியத்தில், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அலங்காநத்தம் பகுதியில், மாணவர் யோகேஸ்வரன் என்பவர், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மாணவரின் பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆட்சியர் நேரில் விளக்கினார்.
ஆட்சியரின் அறிவுரையின்படி, அலங்காநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவன் யோகேஸ்வரன், 8ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். மாணவரின் பெற்றோர்கள் தங்கள் மகனை தொடர்ந்து, பள்ளிக்கு அனுப்புவதாக கலெக்டர் மற்றும் பள்ளி கல்வித்துறையினரிடம், உறுதி அளித்தனர்.




