தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தென்காசி மாவட்டக்கிளை சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவகுமார் தலைமையில் மேலகரத்தில் ராஜா காட்டேஜ் கூட்டரங்கில் வைத்து மாவட்டச் செயற்குழு நடைபெற்றது .
மாவட்டச்செயலாளர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார். இம்மாவட்டச் செயற்குழுவில் பொது செயலாளர் முனைவர் சண்முகநாதன் கலந்து கொண்டு இயக்கச் செயல்பாடுகள் மற்றும் பொறுப்பாளர்கள் கடைமைகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இயக்கத்தின் மாநிலச் செயலாளர் நல்லாசிரியர் ராஜேந்திரன் கலந்து கொண்டு இயக்கத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து விரிவாக பேசினார். மாவட்டச் செயற்குழுவில் மாவட்டத்தலைவர் பொறுப்பிற்கு சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்
கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .
- மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .
- மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆசிரியர்கள் பணியாற்றும் வேளையில் கல்வித்திருவிழாப் போட்டிகளை நடத்துவது என்பது ஆசிரியர்களின் கற்பித்தல் பணியைப் பாதிக்கிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் நாட்களை தள்ளி வைத்திட வேண்டும்.
- TDTA RC மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியேற்று பல வருடங்களாக ஊதியம் பெறாமல் உள்ள ஆசிரியர்களுக்கு பணி ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
- டெட்-2025 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு காலதாமதமில்லாமல் உண்மைத்தன்மைச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்
- தலைமையாசிரியர் பணியிடம் காலிப்பணியிடமாக இருக்கும் பள்ளிகளில் பாரபட்சமில்லாமல் ஆசிரியர் நலனையும் மாணவர் நலனையும் கருத்தில் கொண்டு மாற்றுப்பணி வழங்கிட வேண்டும்
- ஊதிய உயர்வு பட்டியலில் 45வது கலத்தைக் கடந்த ஆசிரியர்களுக்கு தமிழக அரசு விரைந்து புதிய ஊதிய உயர்வு பட்டியல் வழங்கிட வேண்டும்
மேலும் வட்டாரக்கல்வி அலுவலக வருமானவரி வசூல், FTG வசூல் போன்ற ஆசிரியர் நலன் சார்ந்த பிரச்சனைகள், ஊதியம் பெறாமல் இருக்கும் ஆசிரியர்கள் ஆகியவை பற்றி விரிவாக விவாதிகப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது .
இந்நிகழ்வில் அனைத்து ஒன்றியங்களைச் சார்ந்த செயலாளர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்




