Close
செப்டம்பர் 7, 2026 5:20 மணி

சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி

நாமக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் சாலையோர வியாபாரம், சிறு வியாபாரம் மற்றும் தெருவேரா வியாபாரிகள் பலர், மத்திய அரசின் பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் கடனுதவி கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

அதையடுத்து பிரதமரின் ஸ்வநிதி திட்டம் சார்பில், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கடனுதவி வழங்கும் நிழ்ச்சிக்கு, மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேளாளர் சரவணன் பங்கேற்று, திட்ட பயனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் பல்வேறு சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டப் பயன்கள் கிடைக்க வழிவகை செய்யும் வகையில், வியாபாரிகளுக்கு முதல் தவணையாக ரூ. 15,000, 2ஆம் தவணை 25,000, 3ஆம் தவணை ரூ. 50,000 மற்றும் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டது.

மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ. 9.65 கடன் உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகராட்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், முகேஷ், சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வருகிற செப். 30ம் தேதி வரை பிரதமரின் நிதி உதவி வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top