Close
மே 20, 2024 3:02 மணி

ஈரோட்டில் 31ஆம் தேதி முதல்வர் தேர்தல் பிரசாரம்! அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.ஈ.பிரகாஷ், வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு கலால் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து இன்று ஆசி பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியமானதாகும். இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள். இதற்காக திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் அர்ப்பணிப்புடன் முழுமையாக தேர்தல் களப்பணி ஆற்றி வருகிறார்கள்.

நாளை 22ம் தேதி மாலை மேட்டுக்கடை தங்கம் மகாலில் திமுக மற்றும் தோழமைக் கட்சியினர் பங்கேற்கும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது. இம்மாத இறுதியில் 31ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார். அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் எங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

அவரைத் தொடர்ந்து இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்களுக்கு அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளும், கொரானா காலத்தில் வீடு வீடாகச் சென்று 4 முறை ஆளுங்கட்சியினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேருதவி புரிந்தனர். கொரோனா காலத்தில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அரசு செய்துவரும் மக்கள் நலத் திட்டங்களால் திமுக மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

செய்தி: நாராயணசுவாமி.மு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top