Close
ஏப்ரல் 23, 2026 8:18 மணி

தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்க 23ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு

தமிழ்நாடு மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக தொழிலாளர்களுக்கு 23ம் தேதியும், நாமக்கல் பகுதியில் பணிபுரியும் மேற்குவங்க தொழிலாளர்களுக்கு 23, 29ம் தேதியும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக தொழிலாளர் துறை ஆணையர் ராமன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதியும், மேற்கு வங்க மாநிலத்தில் 23 மற்றும் 29ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளான 23ம் தேதி தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கும், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறும் நாளான 23 மற்றும் 29ம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அம்மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் சட்டப்படி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவினை உறுதி செய்ய ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவச்சட்டப்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

மேலும், தேர்தல் நாளன்று வாக்களிப்பது அவசியம் என்பதையும் நிறுவன உரிமையாளர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் 9445398750, 8122021667 மற்றும் 04286-299995 மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top