Close
ஏப்ரல் 23, 2026 10:01 மணி

கைதானவரின் உறவினர்கள் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் மனு

கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கார் மனு அளிப்பதற்காக நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வந்திருந்த செருக்கலை கிராமத்தைச் சேர்ந்த தாமரை

கொலை வழக்கில் கைதானவர்களின் உறவினர்கள், கொலை வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுப்பதால், பாதுகாப்பு கேட்டு பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளார்.

பரமத்தி வேலூர் அருகே உள்ள செருக்கலை கிராமத்தை சேர்ந்த தாமரை (29) என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்து நாமக்கல் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
பரமத்தி வேலூர் அருகே செருக்கலையைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(50). மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. எனக்கு அவர் மாமா உறவு முறை. கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த பிப்., மாதம் 14ம் தேதி அண்ணாதுரை கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் அசோக்குமார், சின்னுசாமி ஆகிய இருவரை நல்லூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 2 பேரின் உறவினர்கள் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி அண்ணாதுரை குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக நல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தும், தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனால் மாமாவின் குடும்பத்தினர் மற்றும் எங்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது. எனவே, கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top