Close
ஏப்ரல் 23, 2026 9:46 மணி

திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: தொண்டர்கள் உற்சாகம்

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது அதில் செங்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, கலசப்பாக்கம், செய்யாறு, வந்தவாசி சட்டப்பேரவை தொகுதிகள் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

திருவண்ணாமலை மற்றும் போளூர் தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணியனை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவித்ததை தொடர்ந்து நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக ராமச்சந்திரன் போட்டியிடுகிறார் .

கலசப்பாக்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தற்போதைய போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் (தனி) சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக  டி.எஸ்.வேலு, வந்தவாசி தொகுதியில் அதிமுக சார்பில் ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கழக செயற்குழு உறுப்பினராகவும் வடக்கு மாவட்ட மகளிர் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

ஆரணி தொகுதியில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் . இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஆவார். மேலும் அத்தொகுதியில் பொது மக்களிடையே நன்கு அறிமுகமானவர்.

அதிமுக வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டவுடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து உற்சாகமடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top