மதுரை மாவட்டம் சோழவந்தானின் ஒரு சில பகுதிகளில் எட்டு மணி நேரத்திற்கு மேலாக திடீர் மின்தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்
சோழவந்தான் பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி நுழைவுத் தெரு பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதி. சோழவந்தான் நகரின் முக்கியமான வியாபார பகுதியான இந்தப் பகுதியில். மதியம் 12 மணி முதல் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மின்சாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது மின்சாரம் வழங்கக்கூடிய ட்ரான்ஸ்பார்மர் பழுதாகிவிட்டதாகவும் அதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியதாக கூறுகின்றனர்
எட்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும் என சாக்கு போக்கு கூறியதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது
இந்த நிலையில் 8:00 மணிக்கு மேல் பழுதடைந்த மின்சார ட்ரான்ஸ்பார்மரை சரி செய்ய இயலவில்லை நாளை காலையில் தான் மின்சாரம் வழங்கப்படும் என கூறியதாக அங்கிருந்த வியாபாரிகள் கூறுகின்றனர். ஏற்கனவே எட்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்த நிலையில் இரவு முழுவதும் மின்சாரம் வழங்க இயலாது அதிகாரிகள் கூறியது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில் பெரிய கடை வீதி பகுதியில் இருந்த பள்ளிவாசலில் இஸ்லாமிய சிறுவர்கள் மற்றும் மாணவிகளுக்கு திருக்குரான் பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இஸ்லாமிய ஆசிரியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்ற போது மின்சாரம் தடைபட்டதால் உடனடியாக மாற்று ஏற்பாடாக யுபிஎஸ் மூலம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தனர்
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஏதாவது அசம்பாவிதம் போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் என்ன செய்வது என்று தெரியவில்லை. மின்சாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் பதிலளிக்கிறார்கள். 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். இரவு முழுவதும் மின்சாரம் வராது என்றும் கூறப்படும் நிலையில் மின்சார துறையின் அலட்சியத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அரசும் மின்சாரத் துறை அமைச்சரும் கூறி வரும் நிலையில் சோழவந்தானின் ஒரு பகுதியில் 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாதது அந்த பகுதியில் பெரும் அச்சத்தையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது. பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன்பு உடனடியாக மின்சாரத்தை வழங்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்




