ஓரி விழாவையொட்டி, கொல்லிமலை பகுதியில் செயல்படும் 4 டாஸ்மாக் கடைகளுக்கு ஆக. 1 முதல் 3 வரை, 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வருகிற ஆக. 2 மற்றும் 3ம் தேதி தமிழக அரசின் சார்பில் ஓரி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி ஆக. 1 முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் அப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையில் செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மற்றும் சேந்தமங்கங்கலம் தாலுகா, காரவள்ளி டாஸ்மாக் கடை ஆகிய 4 கடைகளும் மேற்கண்ட 3 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.
கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




